ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் ஏற்பட்டது. காஷ்மீரில் நிலநடுக்கம் சற்று வலுவாக இருந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் தில்லி என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டது இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள சில குறைந்தது 20 வினாடிகள் நிலம் அதிர்ந்ததாக சிலர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை